Tuesday, February 4, 2014

ஃபேஸ்புக் கவிதைகள்!

நான் முகப்புத்தகத்தில் எழுதிய சில காதல் கவிதைகள்!

1.அவளையே நான் பார்த்துக்கொண்டிருந்த போது...

திடீரென்று என்னை அவள் பார்த்தாள்!

மின்னல் வெட்டியதைப் போன்ற உணர்வு!

இதற்குப் பெயர் தான் காதலோ?


2.உன்னோடு வாழ்ந்தால் நன்றாக இருக்கும்

என எண்ணுவதை விட‌

உன்னோடுதான் வாழ்வேன் என

எண்ணுவது தான் உண்மையான காதல்!




3.கண்கள் பார்க்கிறது! காதுகள் கேட்கிறது!

வாய் தானே பேசவேண்டும்!‍ என் அன்பே

உன்னோடு மட்டும் என் இதயம் பேசுவது எப்படி?


4.நேரமிருந்தால் நினைத்துப்பாருங்கள்

நேரில் வரமுடியாவிட்டாலும் உங்கள்

நினைவிலாவது வருவேன்.


5.ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் அவளை

மட்டும் கண்டுபிடித்துவிடுகிறது என் கண்கள்!

காதலுக்கு கண் இல்லை என்று யார் சொன்னது?


6.உன்னை அவள் காதலிக்கவில்லை என கவலைப்படாதே!

உன்னுடைய காதல் காதலிக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்!

காலத்திற்கு கட்டாயம் தெரியும்!





உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்!






4 comments:

  1. நினைவிலாவது வருவேன் உட்பட அனைத்தையும் ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து வருகை புரிய வேண்டுகிறேன்!

      Delete
  2. உங்கள் பதிவுகளை நோட்டமிட்டதில் சமூகம் ,காதல் ,சினிமா இப்படி பல முகங்கள் தெரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சகோதரி. தொடர்து வருகை தர வேண்டுகிறேன்!!!

      Delete